states

img

உ.பி: செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலி

உத்தரப்பிரதேசத்தில் சூரிய பலகம் மூலம் செல்போனை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 மாத குழந்தை பலியானது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், மின் இணைப்பு இல்லாத தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ஒருவர், சூரிய பலகம் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நபர் வழக்கம் போல் தனது செல்போனை சூரிய பலகம் மூலம் சார்ஜ் செய்தபோது, செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அங்கு இருந்த தனது 8 மாத குழந்தை பலியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;